58.மன்னவன் நாட்டுச் செல்வமும் அதற்கேற்ற அவனது கொடையும் கூறுதல் | | ஆடுக, விறலியர்! பாடுக, பரிசிலர்!- வெண் தோட்டு அசைத்த ஒண் பூங் குவளையர், வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர், செல் உறழ் மறவர் தம் கொல்படைத் தரீஇயர், 'இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின், நாளை | 5 | மண் புனை இஞ்சி மதில் கடந்தல்லது உண்குவம்அல்லேம், புகா' எனக் கூறி, கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்; பொய் படுபு அறியா வயங்கு செந் நாவின், எயில் எறி வல் வில், ஏ விளங்கு தடக் கை, | 10 | ந்து எழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை; வானவரம்பன் என்ப- கானத்துக் கறங்கு இசைச் சிதடி பொரி அரைப் பொருந்திய சிறியிலை வேலம் பெரிய தோன்றும் புன்புலம் வித்தும் வன் கை வினைஞர் | 15 | சீருடைப் பல் பகடு ஒலிப்பப் பூட்டி, நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின் அலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம், அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே. | | துறை:செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணமும் தூக்கும்:அது பெயர்:ஏ விளங்கு தடக்கை | |
| |