கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் 


ஐந்தாம் பத்து - பதிகம்

வடவர் உட்கும் வான் தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்
கடவுள் பத்தினிக் கல்கோள் வேண்டி,
கான் நவில் கானம் கணையின் போகி,  
5
ஆரிய அண்ணலை வீட்டி, பேர் இசை
இன் பல் அருவிக் கங்கை மண்ணி
இனம் தெரி பல் ஆன் கன்றொடு கொண்டு;
மாறா வல்வில் இடும்பில் புறத்து இறுத்து;
உறு புலி அன்ன வயவர் வீழ,    
10
சிறு குரல் நெய்தல் வியலூர் நூறி;
அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து;
பழையன் காக்கும் கருஞ் சினை வேம்பின்
முழாரை முழு முதல் துமியப் பண்ணி,
வால் இழை கழித்த நறும் பல் பெண்டிர் 
15
பல் இருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி; வெந் திறல்
ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர்
ஒன்பதின்மர் வீழ, வாயில் புறத்து இறுத்து;
நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து,  
20
கெடல்அருந் தானையொடு
கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை,
கரணம் அமைந்த காசு அறு செய்யுள்
பரணர் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்:
சுடர் வீ வேங்கை, தசும்பு துளங்கு இருக்கை, ஏறா
ஏணி, நோய் தபு நோன் தொடை, ஊன் துவை அடிசில், கரை
வாய்ப் பருதி, நல் நுதல் விறலியர், பேர் எழில் வாழ்க்கை,
செங்கை மறவர், வெருவரு புனல் தார்: இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்:உம்பற் காட்டு வாரியையும், தன்மகன்
குட்டுவன் சேரலையும், கொடுத்தான் அக் கோ.
கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு
வீற்றிருந்தான்.

உரை