44.மன்னனை 'நெடுங் காலம் வாழ்க' என வாழ்த்துதல் | | நிலம் புடைப்பன்ன ஆர்ப்பொடு, விசும்பு துடையூ, வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க, பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற அரிய என்னாது ஓம்பாது வீசி, கலம் செலச் சுரத்தல் அல்லது, கனவினும், | 5 | 'களைக' என அறியாக் கசடு இல் நெஞ்சத்து, ஆடு நடை அண்ணல்! நின் பாடு மகள் காணியர் காணிலியரோ நிற் புகழ்ந்த யாக்கை முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை: நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை | 10 | சேணன்ஆயினும், 'கேள்' என மொழிந்து, புலம் பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு, அரண்கள் தாவுறீஇ, அணங்கு நிகழ்ந்தன்ன மோகூர் மன்னன் முரசம் கொண்டு, நெடுமொழி பணித்து, அவன் வேம்பு முதல் தடிந்து, | 15 | முரசு செய முரச்சி, களிறு பல பூட்டி, ஒழுகை உய்த்தோய்! கொழு இல் பைந் துணி வைத்தலை மறந்த துய்த் தலைக் கூகை கவலை கவற்றும் குரால்அம் பறந்தலை, முரசுடைத் தாயத்து அரசு பல ஓட்டி, | 20 | துளங்கு நீர் வியலகம் ஆண்டு, இனிது கழிந்த மன்னர் மறைத்த தாழி, வன்னி மன்றத்து விளங்கிய காடே. | | துறை:செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணமும் தூக்கும்:அது பெயர்:நோய் தபு நோன் தொடை | |
|
|