| தலைவன்
|
| கண் அகன் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து, ஏற்ற |
| தண் நறும் பிடவமும், தவழ் கொடித் தளவமும், |
| வண்ண வண் தோன்றியும், வயங்கு இணர்க் கொன்றையும், |
| அன்னவை பிறவும், பல் மலர் துதைய, |
5 | தழையும் கோதையும் இழையும் என்று இவை |
| தைஇயினர், மகிழ்ந்து, திளைஇ விளையாடும் |
| மட மொழி ஆயத்தவருள் இவள் யார் உடம்போடு |
| என் உயிர் புக்கவள், இன்று? |
| பாங்கன்
|
| ஓஒ! இவள், 'பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால், |
10 | திரு மா மெய் தீண்டலர்' என்று, கருமமா, |
| எல்லாரும் கேட்ப, அறைந்து அறைந்து, எப்பொழுதும் |
| சொல்லால் தரப்பட்டவள் |
| சுற்றத்தார்க்குத் தலைவன் செய்தி சொல்லி அனுப்ப, அவர், 'ஏறு தழுவும் விழாவிற்குப் பறை அறைக!' எனல்
|
| 'சொல்லுக!' 'பாணியேம்' என்றார்; 'அறைக' என்றார், பாரித்தார், |
| மாணிழை ஆறாகச் சாறு |
| கண்ட சுற்றத்தார் கூற்று
|
15 | சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து, நோக்கும் வாய்! எல்லாம் |
| மிடை பெறின், நேராத் தகைத்து |
| தகை வகை மிசைமிசைப் பாயியர், ஆர்த்து உடன் |
| எதிர்எதிர் சென்றார் பலர் |
| கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினம் சிறந்து, |
20 | உருத்து எழுந்து ஓடின்று மேல் |
| எழுந்தது துகள்; |
| ஏற்றனர் மார்பு; |
| கவிழ்ந்தன மருப்பு; |
| கலங்கினர் பலர் |
25 | அவருள், மலர் மலி புகல் எழ, அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ |
| எருத்தோடு இமிலிடைத் தோன்றினன்; தோன்றி, |
| வருத்தினான்மன்ற, அவ் ஏறு |
| ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்கொலோ |
| ஏறு உடை நல்லார்: பகை? |
30 | மடவரே, நல் ஆயர் மக்கள் நெருநை, |
| அடல் ஏற்றெருத்து இறுத்தார்க் கண்டும், மற்று இன்றும், |
| உடல் ஏறு கோள் சாற்றுவார்! |
| ஆங்கு, இனி |
| தண்ணுமைப் பாணி தளராது எழூஉக |
35 | பண் அமை இன் சீர்க் குரவையுள், தெண் கண்ணி, |
| திண் தோள், திறல் ஒளி, மாயப் போர், மா மேனி, |
| அம் துவர் ஆடைப் பொதுவனோடு, ஆய்ந்த |
| முறுவலாள் மென் தோள் பாராட்டி, சிறுகுடி |
| மன்றம் பரந்தது, உரை! |