| கார் ஆரப் பெய்த கடி கொள் வியன் புலத்துப் |
| பேராது சென்று, பெரும் பதவப் புல் மாந்தி, |
| நீர் ஆர் நிழல குடம்சுட்டு இனத்துள்ளும், |
| போர் ஆரா ஏற்றின், பொரு நாகு, இளம் பாண்டில் |
5 | தேர் ஊர, செம்மாந்தது போல், மதைஇனள் |
| பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல், |
| மோரோடு வந்தாள் தகை கண்டை; யாரோடும் |
| சொல்லியாள் அன்றே வனப்பு |
| பண்ணித் தமர் தந்து, ஒரு புறம் தைஇய |
10 | கண்ணி எடுக்கல்லாக் கோடு ஏந்து அகல் அல்குல் |
| புண் இல்லார் புண்ணாக நோக்கும்; முழு மெய்யும் |
| கண்ணளோ? ஆயர் மகள் |
| இவள்தான் திருத்தாச் சுமட்டினள், ஏனைத் தோள் வீசி, |
| வரிக் கூழ வட்டி தழீஇ, அரிக் குழை |
15 | ஆடல் தகையள்; கழுத்தினும் வாலிது |
| நுண்ணிதாத் தோன்றும், நுசுப்பு |
| இடை தெரியா ஏஎர் இருவரும் தத்தம் |
| உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார்கொல்லோ? |
| படை இடுவான்மன் கண்டீர், காமன் மடை அடும் |
20 | பாலொடு கோட்டம் புகின் |
| இவள் தான், வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால், மருந்து அல்லள் |
| 'யார்க்கும் அணங்காதல் சான்றாள்' என்று, ஊர்ப் பெண்டிர், |
| 'மாங்காய் நறுங் காடி கூட்டுவேம்; யாங்கும் |
| எழு நின் கிளையொடு போக' என்று தத்தம் |
25 | கொழுநரைப் போகாமல் காத்து, முழு நாளும், |
| வாயில் அடைப்ப, வரும் |