| தலைவி
|
| வாரி, நெறிப்பட்டு, இரும் புறம் தாஅழ்ந்த |
| ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ |
| புதுவ மலர் தைஇ, எமர் என் பெயரால், |
| வதுவை அயர்வாரைக் கண்டு? 'மதி அறியா |
5 | ஏழையை' என்று அகல நக்கு, வந்தீயாய், நீ |
| தோழி! அவனுழைச் சென்று |
| தோழி
|
| சென்று யான் அறிவேன்; கூறுக, மற்று இனி |
| தலைவி
|
| 'சொல் அறியாப் பேதை' மடவை! 'மற்று எல்லா! |
| நினக்கு ஒரூஉம்; மற்று என்று அகல் அகலும்; நீடு இன்று; |
10 | நினக்கு வருவதாக் காண்பாய்'. அனைத்தாகச் |
| சொல்லிய சொல்லும் வியம் கொளக் கூறு |
| தரு மணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி, |
| எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும் |
| பெரும் மணம் எல்லாம் தனித்தே ஒழிய |
15 | வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த |
| திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த |
| ஒரு மணம் தான் அறியும்; ஆயின் எனைத்தும் |
| தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த |
| விரி நீர் உடுக்கை உலகம் பெறினும், |
20 | அரு நெறி ஆயர் மகளிர்க்கு |
| இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே? |