| 'தோழி! நாம், காணாமை உண்ட கடுங் கள்ளை, மெய் கூர, |
| நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு, |
| கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம் |
| புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர் |
5 | முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்! |
| கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய் |
| வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே, |
| அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண, |
| அன்னை முன் வீழ்ந்தன்று, அப் பூ |
10 | அதனை வினவலும் செய்யாள், சினவலும் செய்யாள், |
| நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு, |
| நீங்கிப் புறங்கடைப் போயினாள்; யானும், என் |
| சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த |
| பூங் கரை நீலம் தழீஇ, தளர்பு ஒல்கி, |
15 | பாங்கு அருங் கானத்து ஒளித்தேன்.' 'அதற்கு, எல்லா! |
| ஈங்கு எவன் அஞ்சுவது? |
| அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின், நமரும் |
| அவன்கண் அடைசூழ்ந்தார், நின்னை; அகன் கண் |
| வரைப்பில் மணல் தாழப் பெய்து, திரைப்பில் |
20 | வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம், |
| அல்கலும் சூழ்ந்த வினை.' |