| அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாயாகப் |
| பகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர, |
| இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர, |
| நிலவுக் காண்பது போல அணி மதி ஏர்தர, |
5 | கண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்ப, |
| தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச, |
| முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த, |
| சிறு வெதிர்ங் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மென, |
| பறவை தம் பார்ப்பு உள்ள, கறவை தம் பதிவயின் |
10 | கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர, |
| மா வதி சேர, மாலை வாள் கொள, |
| அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து |
| செந் தீச் செவ்அழல் தொடங்க வந்ததை |
| வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும் |
15 | காலை ஆவது அறியார், |
| மாலை என்மனார், மயங்கியோரே |