| கருங் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசைதொறும் |
| சுரும்பு ஆர்க்கும் குரலினோடு, இருந் தும்பி இயைபு ஊத, |
| ஒருங்குடன் இம்மென இமிர்தலின், பாடலோடு |
| அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளாக் கிடந்தான் போல், |
5 | பெருங் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறுங் கானல் |
| காணாமை இருள் பரப்பி, கையற்ற கங்குலான், |
| மாணா நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ |
| காணவும் பெற்றாயோ? காணாயோ? மட நெஞ்சே! |
| கொல் ஏற்றுச் சுறவினம் கடி கொண்ட மருள் மாலை, |
10 | அல்லல் நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ |
| புல்லவும் பெற்றாயோ? புல்லாயோ? மட நெஞ்சே! |
| வெறி கொண்ட புள்ளினம் வதி சேரும் பொழுதினான், |
| செறி வளை நெகிழ்த்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ |
| அறியவும் பெற்றாயோ? அறியாயோ? மட நெஞ்சே! |
15 | என ஆங்கு |
| எல்லையும் இரவும் துயில் துறந்து, பல் ஊழ் |
| அரும் படர் அவல நோய் செய்தான்கண் பெறல் நசைஇ, |
| இருங் கழி ஓதம் போல் தடுமாறி, |
| வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே! |