| உரவு நீர்த் திரை பொர ஓங்கிய எக்கர்மேல், |
| விரவுப் பல் உருவின வீழ் பெடை துணையாக, |
| இரை தேர்ந்து உண்டு, அசாவிடூஉம் புள்ளினம் இறை கொள |
| முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப, |
5 | நிரை களிறு இடை பட, நெறி யாத்த இருக்கை போல் |
| சிதைவு இன்றிச் சென்றுழிச் சிறப்பு எய்தி, வினை வாய்த்து, |
| துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப! |
| புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்தக்கால், |
| 'நன்னுதால்! அஞ்சல் ஓம்பு' என்றதன் பயன் அன்றோ |
10 | பாயின பசலையால், பகல் கொண்ட சுடர் போன்றாள் |
| மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை? |
| பல் மலர் நறும் பொழில் பழி இன்றிப் புணர்ந்தக்கால், |
| 'சின்மொழி! தெளி' எனத் தேற்றிய சிறப்பு அன்றோ |
| வாடுபு வனப்பு ஓடி வயக்கு உறா மணி போன்றாள் |
15 | நீடு இறை நெடு மென் தோள் நிரை வளை நெகிழ்ந்ததை? |
| அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ. 'மணந்தக்கால், |
| கொடுங் குழாய்! தெளி' எனக் கொண்டதன் கொளை அன்றோ |
| பொறை ஆற்றா நுசுப்பினால், பூ வீந்த கொடி போன்றாள் |
| மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை? |
20 | என ஆங்கு |
| வழிபட்ட தெய்வம்தான் வலி எனச் சார்ந்தார்கண் |
| கழியும் நோய் கைம்மிக அணங்குஆகியது போல, |
| பழி பரந்து அலர் தூற்ற, என் தோழி |
| அழி படர் அலைப்ப, அகறலோ கொடிதே |