| மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன் |
| கானல் அணிந்த உயர் மணல் எக்கர்மேல், |
| சீர் மிகு சிறப்பினோன் மரமுதல் கை சேர்த்த |
| நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப் |
5 | பூ மலர்ந்தவை போல, புள் அல்கும் துறைவ! கேள்: |
| 'ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்; |
| 'போற்றுதல்' என்பது புணர்ந்தாரைப் பிரியாமை; |
| 'பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்; |
| 'அன்பு' எனப்படுவது தன் கிளை செறாஅமை; |
10 | 'அறிவு' எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்; |
| 'செறிவு' எனப்படுவது கூறியது மறாஅமை; |
| 'நிறை' எனப்படுவது மறை பிறர் அறியாமை; |
| 'முறை' எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்; |
| 'பொறை' எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்; |
15 | ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின், என் தோழி |
| நல் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க! |
| தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்; |
| நின்தலை வருந்தியாள் துயரம் |
| சென்றனை களைமோ; பூண்க, நின் தேரே! |