| மல்லரை மறம் சாய்த்த மலர்த் தண் தார் அகலத்தோன், |
| ஒல்லாதார் உடன்று ஓட, உருத்து, உடன் எறிதலின், |
| கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல், |
| கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின், |
5 | இருங் கடல் ஒலித்து ஆங்கே இரவுக் காண்பது போல, |
| பெருங் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர, |
| போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய், |
| பாயல் கொள்பவை போல, கய மலர் வாய் கூம்ப, |
| ஒருநிலையே நடுக்குற்று, இவ் உலகெலாம் அச்சுற, |
10 | இரு நிலம் பெயர்ப்பு அன்ன, எவ்வம் கூர் மருள் மாலை |
| தவல் இல் நோய் செய்தவர்க் காணாமை நினைத்தலின், |
| இகல் இடும் பனி தின, எவ்வத்துள் ஆழ்ந்து, ஆங்கே, |
| கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர, கடல் நோக்கி, |
| அவலம் மெய்க் கொண்டது போலும் அஃது எவன்கொலோ? |
15 | நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின், |
| கடும் பனி கைம்மிக, கையாற்றுள் ஆழ்ந்து, ஆங்கே, |
| நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய, மணல் நோக்கி, |
| இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்கொலோ? |
| வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின், |
20 | கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து, ஆங்கே, |
| மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால், மரன் நோக்கி, |
| எவ்வத்தால் இயன்ற போல், இலை கூம்பல் எவன் கொலோ? |
| என ஆங்கு, |
| கரை காணாப் பௌவத்து, கலம் சிதைந்து ஆழ்பவன் |
25 | திரை தரப் புணை பெற்று, தீது இன்றி உய்ந்தாங்கு, |
| விரைவனர் காதலர் புகுதர, |
| நிரை தொடி துயரம் நீங்கின்றால், விரைந்தே |