| துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி |
| இணை திரள் மருப்பாக, எறி வளி பாகனா |
| அயில் திணி நெடுங் கதவு அமைத்து, அடைத்து, அணி கொண்ட |
| எயில் இடு களிறே போல் இடு மணல் நெடுங் கோட்டைப் |
5 | பயில்திரை, நடு நன்னாள், பாய்ந்து உறூஉம் துறைவ! கேள்: |
| கடி மலர்ப் புன்னைக் கீழ்க் காரிகை தோற்றாளைத் |
| தொடி நெகிழ்ந்த தோளளாத் துறப்பாயால்; மற்று நின் |
| குடிமைக்கண் பெரியது ஓர் குற்றமாய்க் கிடவாதோ? |
| ஆய் மலர்ப் புன்னைக் கீழ் அணி நலம் தோற்றாளை |
10 | நோய் மலி நிலையளாத் துறப்பாயால்; மற்று நின் |
| வாய்மைக்கண் பெரியது ஓர் வஞ்சமாய்க் கிடவாதோ? |
| திகழ் மலர்ப் புன்னைக் கீழ்த் திரு நலம் தோற்றாளை |
| இகழ் மலர்க் கண்ணளாத் துறப்பாயால்; மற்று நின் |
| புகழ்மைக்கண் பெரியது ஓர் புகராகிக் கிடவாதோ? |
15 | என ஆங்கு, |
| சொல்லக் கேட்டனை ஆயின், வல்லே, |
| அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து, |
| மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர |
| உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு |
20 | இயங்கு ஒலி நெடுந் திண் தேர் கடவுமதி, விரைந்தே |