| அரிதே, தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்; |
| பெரிதே காமம்; என் உயிர் தவச் சிறிதே; |
| பலவே யாமம்; பையுளும் உடைய; |
| சிலவே, நம்மோடு உசாவும் அன்றில்; |
5 | அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப, உலமந்து, |
| எழில் எஞ்சு மயிலின் நடுங்கி, சேக்கையின் |
| அழல் ஆகின்று, அவர் நக்கதன் பயனே |
| மெல்லிய நெஞ்சு பையுள் கூர, தம் |
| சொல்லினான் எய்தமை அல்லது, அவர் நம்மை |
10 | வல்லவன் தைஇய, வாக்கு அமை கடு விசை |
| வில்லினான் எய்தலோ இலர்மன்; ஆயிழை! |
| வில்லினும் கடிது, அவர் சொல்லினுள் பிறந்த நோய், |
| நகை முதலாக, நட்பினுள் எழுந்த |
| தகைமையின் நலிதல் அல்லது, அவர் நம்மை |
15 | வகைமையின் எழுந்த தொல் முரண் முதலாக, |
| பகைமையின் நலிதலோ இலர்மன்; ஆயிழை! |
| பகைமையின் கடிது, அவர் தகைமையின் நலியும் நோய், |
| நீயலேன்' என்று என்னை அன்பினால் பிணித்து, தம் |
| சாயலின் சுடுதல் அல்லது, அவர் நம்மைப் |
20 | பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடுஞ் சுடர்த் |
| தீயினால் சுடுதலோ இலர்மன்; ஆயிழை! |
| தீயினும் கடிது, அவர் சாயலின் கனலும் நோய் |
| ஆங்கு |
| அன்னர் காதலராக, அவர் நமக்கு |
25 | இன் உயிர் பேர்த்தரும மருத்துவர் ஆயின், |
| யாங்கு ஆவதுகொல்? தோழி! எனையதூஉம் |
| தாங்குதல் வலித்தன்று ஆயின், |
| நீங்கரிது உற்ற அன்று, அவர் உறீஇய நோயே |