| எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால் |
| தொழில் மாறித் தலை வைத்த தோட்டி கை நிமிர்ந்தாங்கு, |
| அறிவும், நம் அறிவு ஆய்ந்த அடக்கமும், நாணொடு, |
| வறிதாக பிறர் என்னை நகுபவும், நகுபு உடன், |
5 | மின் அவிர் நுடக்கமும் கனவும் போல், மெய் காட்டி |
| என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவி, |
| தன் நலம் கரந்தாளைத் தலைப்படும் ஆறு எவன்கொலோ? |
| மணிப் பீலி சூட்டிய நூலொடு, மற்றை |
| அணிப் பூளை, ஆவிரை, எருக்கொடு, பிணித்து, யாத்து, |
10 | மல்லல் ஊர் மறுகின்கண் இவட் பாடும், இஃது ஒத்தன் |
| எல்லீரும் கேட்டீமின் என்று |
| படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை, |
| நல்கியாள், நல்கியவை |
| பொறை என் வரைத்து அன்றி, பூநுதல் ஈத்த |
15 | நிறை அழி காம நோய் நீந்தி, அறை உற்ற |
| உப்பு இயல் பாவை உறை உற்றது போல, |
| உக்குவிடும் என் உயிர் |
| பூளை, பொல மலர் ஆவிரை வேய் வென்ற |
| தோளாள் எமக்கு ஈத்த பூ |
20 | உரிது என் வரைத்து அன்றி, ஒள்ளிழை தந்த |
| பரிசு அழி பைதல் நோய் மூழ்கி, எரி பரந்த |
| நெய்யுள் மெழுகின் நிலையாது, பை பயத் |
| தேயும் அளித்து என் உயிர் |
| இளையாரும், ஏதிலவரும் உளைய, யான் |
25 | உற்றது உசாவும் துணை |
| என்று யான் பாடக் கேட்டு, |
| அன்புறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின் |
| துன்பத்தில் துணையாய மடல் இனி இவள் பெற |
| இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் அன்புற்று, |
30 | அடங்கு அருந் தோற்றத்து அருந் தவம் முயன்றோர் தம் |
| உடம்பு ஒழித்து உயர் உலகு இனிது பெற்றாங்கே |