| புரிவுண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை, |
| அருகுவித்து ஒருவரை அகற்றலின், தெரிவார்கண், |
| செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது, |
| நயம் நின்ற பொருள் கெடப் புரி அறு நரம்பினும் |
5 | பயன் இன்று மன்றம்ம, காமம் இவள் மன்னும் |
| ஒள் நுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும், |
| முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கி, தன் |
| கண்ணினும் முகத்தினும் நகுபவள்; பெண் இன்றி |
| யாவரும் தண் குரல் கேட்ப, நிரை வெண் பல் |
10 | மீ உயர் தோன்ற, நகாஅ, நக்காங்கே, |
| பூ உயிர்த்தன்ன புகழ் சால் எழில் உண்கண் |
| ஆய் இதழ் மல்க அழும் |
| ஓஒ! அழிதகப் பாராதே, அல்லல் குறுகினம்; |
| காண்பாம் கனங்குழை பண்பு |
15 | என்று, எல்லீரும் என் செய்தீர்? என்னை நகுதிரோ? |
| நல்ல நகாஅலிர் மற்கொலோ யான் உற்ற |
| அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு |
| புல்லிப் புணரப் பெறின் |
| 'எல்லா! நீ உற்றது எவனோ மற்று?' என்றீரேல், 'எற் சிதை |
20 | செய்தான் இவன்' என, 'உற்றது இது' என, |
| எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின், |
| பைதல ஆகிப் பசக்குவமன்னோ என் |
| நெய்தல் மலர் அன்ன கண்? |
| கோடு வாய் கூடாப் பிறையை, பிறிது ஒன்று |
25 | நாடுவேன், கண்டனென்; சிற்றிலுள் கண்டு, ஆங்கே, |
| ஆடையான் மூஉய் அகப்படுப்பேன்; சூடிய, |
| காணான் திரிதரும்கொல்லோ மணி மிடற்று |
| மாண் மலர்க் கொன்றையவன்? |
| 'தெள்ளியேம்' என்று உரைத்து, தேராது, ஒரு நிலையே, |
30 | 'வள்ளியை ஆக!' என நெஞ்சை வலியுறீஇ, |
| உள்ளி வருகுவர்கொல்லோ? வளைந்து யான் |
| எள்ளி இருக்குவேன் மற்கொலோ? நள்ளிருள் |
| மாந்தர் கடி கொண்ட கங்குல், கனவினால், |
| தோன்றினனாக, தொடுத்தேன்மன், யான்; தன்னைப் |
35 | பையெனக் காண்கு விழிப்ப, யான் பற்றிய |
| கையுளே, மாய்ந்தான், கரந்து |
| கதிர் பகா ஞாயிறே! கல் சேர்திஆயின், |
| அவரை நினைத்து, நிறுத்து என் கை நீட்டித் |
| தருகுவைஆயின், தவிரும் என் நெஞ்சத்து |
40 | உயிர் திரியா மாட்டிய தீ |
| மை இல் சுடரே! மலை சேர்தி நீ ஆயின், |
| பௌவ நீர்த் தோன்றிப் பகல் செய்யும் மாத்திரை, |
| கைவிளக்காகக் கதிர் சில தாராய்! என் |
| தொய்யில் சிதைத்தானைத் தேர்கு |
45 | சிதைத்தானைச் செய்வது எவன்கொலோ? எம்மை |
| நயந்து, நலம் சிதைத்தான் |
| மன்றப் பனைமேல் மலை மாந் தளிரே! நீ |
| தொன்று இவ் உலகத்துக் கேட்டும் அறிதியோ? |
| மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால், யான் காணேன் |
50 | நன்று தீது என்று பிற |
| நோய் எரியாகச் சுடினும், சுழற்றி, என் |
| ஆய் இதழ் உள்ளே கரப்பன் கரந்தாங்கே |
| நோய் உறு வெந் நீர்: தெளிப்பின், தலைக் கொண்டு |
| வேவது, அளித்து இவ் உலகு |
55 | மெலியப் பொறுத்தேன்; களைந்தீமின் சான்றீர்! |
| நலிதரும் காமமும் கௌவையும் என்று, இவ் |
| வலிதின் உயிர் காவாத் தூங்கி, ஆங்கு, என்னை |
| நலியும் விழுமம் இரண்டு |
| எனப் பாடி, |
60 | இனைந்து நொந்து அழுதனள்; நினைந்து நீடு உயிர்த்தனள்; |
| எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி, எல்லிரா |
| நல்கிய கேள்வன் இவன் மன்ற, மெல்ல |
| மணியுள் பரந்த நீர் போலத் துணிவாம் |
| கலம் சிதை இல்லத்துக் காழ் கொண்டு தேற்றக் |
65 | கலங்கிய நீர்போல் தெளிந்து, நலம் பெற்றாள், |
| நல் எழில் மார்பனைச் சார்ந்து |