| 'அகல் ஆங்கண், இருள் நீங்கி, அணி நிலாத் திகழ்ந்த பின், |
| பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல், நகல் இன்று |
| நல் நுதல் நீத்த திலகத்தள், "மின்னி |
| மணி பொரு பசும் பொன்கொல்? மா ஈன்ற தளிரின்மேல் |
5 | கணிகாரம் கொட்கும்கொல்?" என்றாங்கு அணி செல |
| மேனி மறைத்த பசலையள், ஆனாது |
| நெஞ்சம் வெறியா நினையா, நிலன் நோக்கா, |
| அஞ்சா, அழாஅ, அரற்றா, இஃது ஒத்தி |
| என் செய்தாள்கொல்?' என்பீர்! கேட்டீமின் பொன் செய்தேன் |
10 | மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது, |
| அறை கொன்று, மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச, |
| பறை அறைந்தாங்கு, ஒருவன் நீத்தான் அவனை |
| அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின், யானும் |
| நிறை உடையேன் ஆகுவேன்மன்ற மறையின் என் |
15 | மென் தோள் நெகிழ்த்தானை மேஎய், அவன் ஆங்கண் |
| சென்று, சேட்பட்டது, என் நெஞ்சு |
| 'ஒன்றி முயங்கும்' என்று, என் பின் வருதிர்; மற்று ஆங்கே, |
| 'உயங்கினாள்' என்று, ஆங்கு உசாதிர்; 'மற்று அந்தோ |
| மயங்கினாள்!' என்று மருடிர்; கலங்கன்மின் |
20 | இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை |
| என் உயிர் காட்டாதோ மற்று? |
| 'பழி தபு ஞாயிறே! பாடு அறியாதார்கண் |
| கழியக் கதழ்வை' எனக் கேட்டு, நின்னை |
| வழிபட்டு இரக்குவேன் வந்தேன் என் நெஞ்சம் |
25 | அழியத் துறந்தானைச் சீறுங்கால், என்னை |
| ஒழிய விடாதீமோ என்று |
| அழிதக மாஅந் தளிர் கொண்ட போழ்தினான், இவ் ஊரார் |
| தாஅம் தளிர் சூடித் தம் நலம் பாடுப; |
| ஆஅம் தளிர்க்கும் இடைச் சென்றார் மீள்தரின், |
30 | யாஅம் தளிர்க்குவேம்மன் |
| நெய்தல் நெறிக்கவும் வல்லன்; நெடு மென் தோள் |
| பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன்; இள முலைமேல் |
| தொய்யில் எழுதவும் வல்லன்; தன் கையில் |
| சிலை வல்லான் போலும் செறிவினான்; நல்ல |
35 | பல வல்லன் தோள் ஆள்பவன் |
| நினையும் என் உள்ளம்போல், நெடுங் கழி மலர் கூம்ப; |
| இனையும் என் நெஞ்சம்போல், இனம் காப்பார் குழல் தோன்ற; |
| சாய என் கிளவிபோல், செவ்வழி யாழ் இசை நிற்ப; |
| போய என் ஒளியேபோல், ஒரு நிலையே பகல் மாய; |
40 | காலன்போல் வந்த கலக்கத்தோடு என்தலை |
| மாலையும் வந்தன்று, இனி |
| இருளொடு யான் ஈங்கு உழப்ப, என் இன்றிப் பட்டாய்; |
| அருள் இலை; வாழி! சுடர்! |
| ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல்லாயின், |
45 | மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து |
| வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் வாயெனின், |
| யாண்டும், உடையேன் இசை, |
| ஊர் அலர் தூற்றும்; இவ் உய்யா விழுமத்துப் |
| பீர் அலர் போலப் பெரிய பசந்தன |
50 | நீர் அலர் நீலம் என, அவர்க்கு, அஞ்ஞான்று, |
| பேர் அஞர் செய்த என் கண் |
| தன் உயிர் போலத் தழீஇ, உலகத்து |
| மன் உயிர் காக்கும் இம் மன்னனும் என் கொலோ |
| இன் உயிர் அன்னானைக் காட்டி, எனைத்து ஒன்றும் |
55 | என் உயிர் காவாதது? |
| என ஆங்கு, |
| மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள் |
| பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேர, |
| தென்னவற் தெளித்த தேஎம் போல, |
60 | இன் நகை எய்தினள், இழந்த தன் நலனே |