| ‘பால் மருள் மருப்பின், உரல் புரை பாவு அடி, |
| ஈர் நறுங் கமழ் கடாஅத்து, இனம் பிரி ஒருத்தல் |
| ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து, |
| பொருள்வயிற் பிரிதல் வேண்டும்’ என்னும் |
5 | அருள் இல் சொல்லும், நீ சொல்லினையே; |
| நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி, |
| நின்னின் பிரியலன், அஞ்சல் ஓம்பு’ என்னும் |
| நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே: |
| அவற்றுள் யாவோ வாயின? மாஅல் மகனே! |
10 | ‘கிழவர் இன்னோர்’ என்னாது, பொருள்தான், |
| பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும்; |
| அன்ன பொருள்வயிற் பிரிவோய் நின் இன்று |
| இமைப்புவரை வாழாள் மடவோள் |
| அமைக் கவின் கொண்ட தோள் இணை மறந்தே |