| இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர், |
| புலம் கடி கவணையின், பூஞ் சினை உதிர்க்கும் |
| விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம் |
| தனியே இறப்ப, யான் ஒழிந்திருத்தல் |
5 | நகுதக்கன்று, இவ் அழுங்கல் ஊர்க்கே: |
| இனி யான், |
| உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன் |
| தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர் |
| வேள் நீர் உண்ட குடை ஓரன்னர் |
10 | நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் |
| அல்குநர் போகிய ஊர் ஓரன்னர் |
| கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர் |
| சூடினர் இட்ட பூ ஓரன்னர் |
| என ஆங்கு, |
15 | யானும் நின்னகத்து அனையேன்; ஆனாது, |
| கொலை வெங் கொள்கையொடு நாய் அகப்படுப்ப, |
| வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல, |
| நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை |
| என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே |