| ‘ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும், |
| பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும், |
| மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும், |
| ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும், |
5 | ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்கு, |
| தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல, |
| போது அவிழ் மரத்தொடு பொருகரை கவின் பெற, |
| நோ தக வந்தன்றால், இளவேனில் மே தக |
| பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்து, |
10 | தொல் கவின் தொலைந்த என் தட மென் தோள் உள்ளுவார் |
| ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி, |
| வெல் புகழ் உலகு ஏத்த, விருந்து நாட்டு உறைபவர் |
| திசை திசை தேன் ஆர்க்கும் திருமருதமுன்துறை, |
| வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார் |
15 | நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரைத் தாங்கி, தம் |
| இசை பரந்து, உலகு ஏத்த, ஏதில் நாட்டு உறைபவர் |
| அறல் சாஅய் பொழுதோடு, எம் அணி நுதல் வேறாகி, |
| திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார் |
| ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி, |
20 | ஆறு இன்றிப் பொருள் வெஃகி, அகன்ற நாட்டு உறைபவர்’ |
| என, நீ |
| தெருமரல் வாழி, தோழி! நம் காதலர், |
| பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர் |
| செரு மேம்பட்ட வென்றியர்; |
25 | ‘வரும்’ என வந்தன்று, அவர் வாய்மொழித் தூதே |