| ‘பாடல் சால் சிறப்பின் சினையவும், சுனையவும் |
| நாடினர் கொயல் வேண்டா, நயந்து தாம் கொடுப்ப போல், |
| தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார்கண் |
| தோடுறத் தாழ்ந்து, துறை துறை கவின் பெற, |
5 | செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு, |
| தொய்யகம் தாழ்ந்த கதுப்புப் போல் துவர் மணல் |
| வையை வார் அவிர் அறல், இடை போழும் பொழுதினான் |
| விரிந்து ஆனா மலராயின், விளித்து ஆலும் குயிலாயின், |
| பிரிந்து உள்ளார் அவராயின், பேதுறூஉம் பொழுதாயின், |
10 | அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது |
| வருந்த, நோய் மிகுமாயின் வணங்கிறை! அளி என்னோ? |
| புதலவை மலராயின், பொங்கரின வண்டாயின், |
| அயலதை அலராயின், அகன்று உள்ளார் அவராயின், |
| மதலை இல் நெஞ்சொடு மதனிலள் என்னாது |
15 | நுதல் ஊரும் பசப்பாயின் நுணங்கிறை! அளி என்னோ? |
| தோயின அறலாயின், சுரும்பு ஆர்க்கும் சினையாயின், |
| மாவின தளிராயின், மறந்து உள்ளார் அவராயின், |
| பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது |
| பாயல் நோய் மிகுமாயின் பைந்தொடி! அளி என்னோ?' |
20 | என ஆங்கு, |
| ஆயிழாய்! ஆங்கனம் உரையாதி; சேயார்க்கு |
| நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா; நம்மினும் |
| தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர், |
| பரிந்து எவன் செய்தி வருகுவர் விரைந்தே? |