| எஃகு இடை தொட்ட, கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் |
| மை அற விளங்கிய, துவர் மணல் அது; அது |
| ஐதாக நெறித்தன்ன அறல் அவிர் நீள் ஐம்பால் |
| அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல், |
5 | பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொள |
| துணி நீரால், தூ மதி நாளால், அணி பெற |
| ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும், |
| ஆன்றவர் அடக்கம் போல் அலர்ச் செல்லாச் சினையொடும், |
| வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும், |
10 | நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும், |
| உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும், |
| புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவுற்ற கொடியொடும் |
| நயந்தார்க்கோ நல்லைமன், இளவேனில்! எம் போல? |
| பசந்தவர் பைதல் நோய் பகை எனத் தணித்து, நம் |
15 | இன் உயிர் செய்யும் மருந்தாகி, பின்னிய |
| காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லைப் |
| போது ஆரக் கொள்ளும் கமழ் குரற்கு என்னும் |
| தூது வந்தன்றே தோழி! |
| துயர் அறு கிளவியோடு: அயர்ந்தீகம் விருந்தே |