| ‘வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய |
| யாறு கண் விழித்த போல், கயம் நந்திக் கவின் பெற, |
| மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல, |
| பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக, |
5 | துணி கய நிழல் நோக்கித் துதைபு உடன் வண்டு ஆர்ப்ப, |
| மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய, |
| காதலர்ப் புணர்ந்தவர் கவவுக் கை நெகிழாது, |
| தாது அவிழ் வேனிலோ வந்தன்று; வாரார், நம் |
| போது எழில் உண்கண் புலம்ப நீத்தவர்! |
10 | எரி உரு உறழ இலவம் மலர, |
| பொரி உரு உறழப் புன்கு பூ உதிர, |
| புது மலர்க் கோங்கம் பொன் எனத் தாது ஊழ்ப்ப, |
| தமியார்ப் புறத்து எறிந்து எள்ளி, முனிய வந்து, |
| ஆர்ப்பது போலும் பொழுது; என் அணி நலம் |
15 | போர்ப்பது போலும் பசப்பு |
| நொந்து நகுவன போல் நந்தின, கொம்பு; நைந்து உள்ளி |
| உகுவது போலும், என் நெஞ்சு; எள்ளி, |
| தொகுபு உடன் ஆடுவ போலும், மயில்; கையில் |
| உகுவன போலும், வளை; என் கண் போல் |
20 | இகுபு அறல் வாரும் பருவத்தும் வாரார்; |
| மிகுவது போலும், இந் நோய் |
| நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல் |
| இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊத |
| தூது அவர் விடுதரார் துறப்பார்கொல்? நோதக, |
25 | இருங் குயில் ஆலும் அரோ.’ |
| என ஆங்கு, |
| புரிந்து நீ எள்ளும் குயிலையும், அவரையும், புலவாதி |
| நீல் இதழ் உண்கணாய்! நெறி கூந்தல் பிணி விட, |
| நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி, |
30 | மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் |
| கால் உறழ் கடுந் திண் தேர் கடவினர் விரைந்தே |