| ‘மன் உயிர் ஏமுற, மலர் ஞாலம் புரவு ஈன்று, |
| பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி, இறந்த பின், |
| சில் நீரால் அறல் வார, அகல் யாறு கவின் பெற, |
| முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்கண் |
5 | பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளர் போல், |
| பல் மலர் சினை உக, சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப, |
| இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான் |
| விரி காஞ்சித் தாது ஆடி இருங் குயில் விளிப்பவும், |
| பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும், |
10 | கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி, |
| எரி பொத்தி, என் நெஞ்சம் சுடும்ஆயின், எவன் செய்கோ? |
| பொறை தளர் கொம்பின்மேல் சிதரினம் இறை கொள, |
| நிறை தளராதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும், |
| முறை தளர்ந்த மன்னவன் கீழ்க் குடி போலக் கலங்குபு, |
15 | பொறை தளர்பு பனி வாரும் கண்ஆயின், எவன் செய்கோ? |
| தளை அவிழ் பூஞ் சினைச் சுரும்பு யாழ் போல இசைப்பவும், |
| கொளை தளராதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும், |
| கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று, |
| வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள்ஆயின், எவன் செய்கோ?’ |
20 | என ஆங்கு, |
| நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல்; எல்லா! நாம் |
| எண்ணிய நாள்வரை இறவாது, காதலர் |
| பண்ணிய மாவினர் புகுதந்தார் |
| கண் உறு பூசல் கை களைந்தாங்கே |