| ஒன்று, இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும்; உலகம் |
| புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்; |
| வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல், |
| நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்; |
5 | இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க |
| வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன்; |
| அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு, என்னைச் |
| சொல்லும் சொல், கேட்டீ சுடரிழாய்! பல் மாணும்: |
| ‘நின் இன்றி அமையலேன் யான்’ என்னும் அவன் ஆயின், |
10 | அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிதுஆயின், |
| என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உளகொல்லோ? நறுநுதால்! |
| ‘அறியாய் நீ; வருந்துவல் யான்’ என்னும் அவன் ஆயின், |
| தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிதுஆயின், |
| அளியரோ, எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார்? |
15 | ‘வாழலேன், யான்’ என்னும் ‘நீ நீப்பின்’ அவன் ஆயின், |
| ‘ஏழையர்’ எனப் பலர் கூறும் சொல் பழி ஆயின், |
| சூழுங் கால், நினைப்பது ஒன்று அறிகலேன், வருந்துவல்; |
| சூழுங்கால், நறுநுதால்! நம்முளே சூழ்குவம் |
| ‘அவனை, |
20 | நாண் அட, பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது; |
| "பேணினர்" எனப்படுதல் பெண்மையும் அன்று; அவன் |
| வௌவினன் முயங்கும் மாத்திரம் வா’ எனக் |
| கூறுவென் போலக் காட்டி, |
| மற்று அவன் மேஎவழி மேவாய், நெஞ்சே! |