| கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு |
| நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை, |
| நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின், |
| கனவில் கண்டு, கதுமென வெரீஇ, |
5 | புதுவதாக மலர்ந்த வேங்கையை |
| ‘அது’ என உணர்ந்து, அதன் அணி நலம் முருக்கி, |
| பேணா முன்பின் தன் சினம் தணிந்து, அம் மரம் |
| காணும் பொழுதின் நோக்கல் செல்லாது, |
| நாணி இறைஞ்சும் நல் மலை நல் நாட! |
10 | போது எழில் மலர் உண்கண் இவள்மாட்டு நீ இன்ன |
| காதலை என்பதோ இனிது மற்று இன்னாதே, |
| மின் ஓரும் கண் ஆக, இடி என்னாய், பெயல் என்னாய், |
| இன்னது ஓர் ஆர் இடை, ஈங்கு நீ வருவதை |
| இன்புற அளித்தனை இவள்மாட்டு நீ இன்ன |
15 | அன்பினை என்பதோ இனிது மற்று இன்னாதே, |
| மணம் கமழ் மார்பினை, மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து, |
| அணங்குடை ஆர் இடை, ஈங்கு நீ வருவதை |
| இருள் உறழ் இருங் கூந்தல் இவள்மாட்டு நீ இன்ன |
| அருளினை என்பதோ இனிது மற்று இன்னாதே, |
20 | ஒளிறு வேல் வலன் ஏந்தி, ‘ஒருவன் யான்’ என்னாது, |
| களிறு இயங்கு ஆர் இடை, ஈங்கு நீ வருவதை |
| அதனால் |
| இரவின் வாரல், ஐய! விரவு வீ |
| அகல் அறை வரிக்கும் சாரல், |
25 | பகலும் பெறுவை, இவள் தட மென் தோளே |