| "கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெற, |
| பொடி அழல் புறந்தந்த பூவாப் பூம் பொலன் கோதை, |
| தொடி செறி யாப்பு அமை அரி முன்கை, அணைத் தோளாய்! |
| அடி உறை அருளாமை ஒத்ததோ, நினக்கு?" என்ன, |
5 | நரந்தம் நாறு இருங் கூந்தல் எஞ்சாது நனி பற்றி, |
| பொலம் புனை மகரவாய் நுங்கிய சிகழிகை, |
| நலம் பெறச் சுற்றிய குரல் அமை ஒரு காழ் |
| விரல் முறை சுற்றி, மோக்கலும் மோந்தனன்; |
| நறாஅ அவிழ்ந்தன்ன என் மெல் விரற் போது கொண்டு, |
10 | செறாஅச் செங் கண் புதைய வைத்து, |
| பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்; |
| தொய்யில் இள முலை இனிய தைவந்து, |
| தொய்யல் அம் தடக் கையின், வீழ் பிடி அளிக்கும் |
| மையல் யானையின், மருட்டலும் மருட்டினன் |
15 | அதனால், |
| அல்லல் களைந்தனன், தோழி! நம் நகர் |
| அருங் கடி நீவாமை கூறின், நன்று’ என |
| நின்னொடு சூழ்வல், தோழி! ‘நயம் புரிந்து, |
| இன்னது செய்தாள் இவள்’ என, |
20 | மன்னா உலகத்து மன்னுவது புரைமே |