| தளை நெகிழ் பிணி நிவந்த பாசடைத் தாமரை |
| முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி, |
| அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் |
| துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட, நேர், அரி, முன்கை, |
5 | சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் |
| விளையாட, அரி பெய்த அழகு அமை புனை வினை |
| ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப, அம் சில இயலும் நின் |
| பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு, என் பால |
| என்னை விட்டு இகத்தர, இறந்தீவாய்! கேள், இனி: |
10 | மருளி, யான் மருள் உற, ‘ "இவன் உற்றது எவன்?" என்னும் |
| அருள் இலை இவட்கு' என அயலார் நிற் பழிக்குங்கால், |
| வை எயிற்றவர் நாப்பண், வகை அணிப் பொலிந்து, நீ |
| தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ? |
| உருளிழாய்! ‘ "ஒளி வாட, இவன் உள் நோய் யாது?" என்னும் |
15 | அருள் இலை இவட்கு' என அயலார் நிற் பழிக்குங்கால், |
| பொய்தல மகளையாய், பிறர் மனைப் பாடி, நீ |
| எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ? |
| ஆய்தொடி! ' "ஐது உயிர்த்து, இவன் உள் நோய் யாது?" என்னும் |
| நோய் இலை இவட்கு’ என நொதுமலர் பழிக்குங்கால், |
20 | சிறு முத்தனைப் பேணி, சிறு சோறு மடுத்து, நீ |
| நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ? |
| என ஆங்கு, |
| அனையவை உளையவும், யான் நினக்கு உரைத்ததை |
| இனைய நீ செய்தது உதவாயாயின், சேயிழாய்! |
25 | செய்ததன் பயம் பற்று விடாது; |
| நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே |