| தலைவி
|
| ஏஎ இஃது ஒத்தன், நாண் இலன் தன்னொடு |
| மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும் |
| தலைவன் பதிலும், தலைவி வேட்கை மறுத்து உரைத்தலும்
|
| ‘மேவினும், மேவாக்கடையும், அஃது எல்லாம் |
| நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற |
5 | மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான் |
| புல் இனிது ஆகலின், புல்லினென்’ எல்லா! |
| தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா |
| செய்வது நன்று ஆமோ மற்று?’ |
| ‘மகளிரை வலிதிற் புணர்திற் புணர்தலும் அறநூல் வழக்கு’ என, தலைவன் மொழிதல்
|
| சுடர்த் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றிக் கேள்! |
10 | வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று |
| உண்பவோ, நீர் உண்பவர்? |
| செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன்கொலோ |
| ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா? |
| ‘மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை |
15 | வௌவிக் கொளலும் அறன்’ எனக் கண்டன்று |
| புணர்ச்சிக்கு உடம்பட்டு, தலைவி நெஞ்சொடு கூறுதல்
|
| ‘அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி, |
| கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம் |
| வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு |
| மாறு உண்டோ, நெஞ்சே! நமக்கு? |