| இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள், |
| துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ, |
| சேடு இயல் வள்ளத்துப் பெய்த பால் சில காட்டி, |
| ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல, |
5 | புது நீர புதல், ஒற்றப் புணர் திரைப் பிதிர் மல்க, |
| மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி, |
| கடி கயத் தாமரைக் கமழ் முகை, கரை மாவின் |
| வடி தீண்ட, வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர! |
| கண்ணி, நீ கடி கொண்டார்க் கனைதொறும், யாம் அழ, |
10 | பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ |
| 'பேணான்' என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான், |
| மேல் நாள், நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை? |
| நாடி நின் தூது ஆடி, துறை செல்லாள், ஊரவர் |
| ஆடை கொண்டு, ஒலிக்கும், நின் புலைத்தி காட்டு என்றாளோ |
15 | கூடியார் புனல் ஆடப் புணை ஆய மார்பினில், |
| ஊடியார் எறிதர, ஒளி விட்ட அரக்கினை? |
| வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் |
| அறிவுடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோ |
| களி பட்டார் கமழ் கோதை கயம்பட்ட உருவின்மேல் |
20 | குறி பெற்றார் குரற் கூந்தற் கோடு உளர்ந்த துகளினை? |
| என ஆங்கு |
| செறிவுற்றேம், எம்மை நீ செறிய; அறிவுற்று, |
| அழிந்து உகு நெஞ்சத்தேம்; அல்லல் உழப்ப; |
| கழிந்தவை உள்ளாது, கண்ட இடத்தே, |
25 | அழிந்து நிற் பேணிக் கொளலின் இழிந்ததோ |
| இந் நோய் உழத்தல் எமக்கு? |