| 'புனைஇழை நோக்கியும், புனல் ஆடப் புறம் சூழ்ந்தும், |
| அணி வரி தைஇயும், நம் இல் வந்து வணங்கியும், |
| நினையுபு வருந்தும் இந் நெடுந்தகை திறத்து, இவ் ஊர் |
| இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ?' என |
5 | வினவுதியாயின், விளங்கிழாய்! கேள், இனி: |
| 'செவ் விரல் சிவப்பு ஊரச் சேண் சென்றாய்' என்று, அவன் |
| பௌவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்தற்கோ |
| 'கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல் |
| ஒவ்வா' என்று உணராய், நீ ஒரு நிலையே உரைத்ததை? |
10 | ஒடுங்கி, யாம் புகல் ஒல்லேம் பெயர்தர, அவன் கண்டு, |
| நெடு்ங் கய மலர் வாங்கி, நெறித்துத் தந்தனைத்தற்கோ |
| விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய்யாகக் |
| கடிந்ததும் இலையாய், நீ கழறிய வந்ததை? |
| 'வரி தேற்றாய், நீ' என, வணங்கு இறை அவன் பற்றி, |
15 | தெரி வேய்த் தோள் கரும்பு எழுதித் தொய்யில் செய்தனைத்தற்கோ |
| புரிபு நம் ஆயத்தார் பொய்யாக எடுத்த சொல் |
| உரிது என உணராய், நீ உலமந்தாய் போன்றதை |
| என ஆங்கு, |
| அரிது இனி, ஆயிழாய்! அது தேற்றல்; புரிபு ஒருங்கு, |
20 | அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று, ஈங்கே, |
| தான் நயந்து இருந்தது இவ்வூர் ஆயின், எவன்கொலோ |
| நாம் செயற்பாலது, இனி? |