| இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண், பிறிது யாதும் |
| துணை இன்றித் தளை விட்ட, தாமரைத் தனி மலர்; |
| திருமுகம் இறைஞ்சினள், வீழ்பவற்கு, இனைபவள் |
| அரி மதர் மழைக் கண் நீர் அலர்முலைமேல் தெறிப்பபோல், |
5 | தகை மலர்ப் பழனத்த புள் ஒற்ற, ஒசிந்து ஒல்கி, |
| மிக நனி சேர்ந்த அம் முகைமிசை அம் மலர் |
| அக இதழ்த் தண் பனி உறைத்தரும் ஊர! கேள்: |
| தண் தளிர்த் தகை பூத்த தாது எழில் நலம் செலக் |
| கொண்டு, நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்மன் |
10 | உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து, 'நின் |
| பெண்டு' எனப் பிறர் கூறும் பழி மாறப் பெறுகற்பின்? |
| பொன் எனப் பசந்த, கண் போது எழில் நலம் செல; |
| தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்மன் |
| நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள் |
15 | என்னுழை வந்து, நொந்து உரையாமை பெறுகற்பின்? |
| மாசு அற மண் உற்ற மணி ஏசும் இருங் கூந்தல் |
| வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்மன் |
| நோய் சேர்ந்த திறம் பண்ணி, நின் பாணன், எம் மனை |
| நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின்? |
20 | ஆங்க |
| 'கடைஇய நின் மார்பு தோயலம்' என்னும், |
| இடையும், நிறையும் எளிதோ நிற் காணின், |
| கடவுபு, கைத்தங்கா, நெஞ்சு என்னும் தம்மோடு |
| உடன் வாழ் பகை உடையார்க்கு? |