| நயம் தலை மாறுவார் மாறுக; மாறா, |
| கயந் தலை மின்னும் கதிர் விடு முக் காழ், |
| பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி |
| திகழ் ஒளி முத்து அங்கு அரும்பாகத் தைஇப் |
5 | பவழம் புனைந்த பருதி சுமப்ப, |
| கவழம் அறியா நின் கை புனை வேழம் |
| புரி புனை பூங் கயிற்றின் பைபய வாங்கி, |
| அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து, ஈங்கே |
| வருக! எம் பாக மகன்! |
10 | கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும் |
| தளர் நடை காண்டல் இனிது; மற்று, இன்னாதே, |
| 'உளம்' என்னா நுந்தைமாட்டு எவ்வம் உழப்பார் |
| வளை நெகிழ்பு யாம் காணுங்கால் |
| ஐய! காமரு நோக்கினை, 'அத்தத்தா' என்னும் நின் |
15 | தே மொழி கேட்டல் இனிது; மற்று, இன்னாதே, |
| உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச் சாஅய்மார் |
| எவ்வ நோய் யாம் காணுங்கால் |
| ஐய! 'திங்கட் குழவி, வருக!' என, யான் நின்னை |
| அம்புலி காட்டல் இனிது; மற்று, இன்னாதே, |
20 | நல்காது நுந்தை புறம் மாறப்பட்டவர் |
| அல்குல் வரி யாம் காணுங்கால் |
| ஐய! எம் காதில் கனங் குழை வாங்கி, பெயர்தொறும், |
| போது இல் வறுங் கூந்தல், கொள்வதை, நின்னை யாம் |
| ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில் |
25 | தாது தேர் வண்டின் கிளை பட, தைஇய |
| கோதை பரிபு ஆட; காண்கும் |