| தலைவி தோழியை வினாவுதல்
|
| உறு வளி தூக்கும் உயர் சினை மாவின் |
| நறு வடி ஆர் இற்றவை போல் அழிய, |
| கரந்து யான் அரக்கவும், கை நில்லா வீங்கிச் |
| சுரந்த என் மெல் முலைப் பால் பழுதாக நீ |
5 | நல் வாயில் போத்தந்த பொழுதினான், 'எல்லா! |
| கடவுட் கடி நகர்தோறும் இவனை |
| வலம் கொளீஇ வா' என, சென்றாய் விலங்கினை |
| ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள் |
| யார் இல் தவிர்ந்தனை? கூறு |
| தோழி கூறிய செய்தி உணர்ந்து, தலைவி நெஞ்சொடு கிளத்தல்
|
10 | நீருள் அடை மறை ஆய் இதழ்ப் போதுபோல் கொண்ட |
| குடைநிழல் தோன்றும் நின் செம்மலைக் காணூஉ, |
| 'இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு, உள்ளா |
| மகன் அல்லான் பெற்ற மகன்' என்று அகல்நகர் |
| வாயில் வரை இறந்து போத்தந்து, தாயர் |
15 | தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன்; மற்று, அவர் |
| தம்தம் கலங்களுள், 'கையுறை' என்று இவற்கு, |
| ஒத்தவை ஆராய்ந்து, அணிந்தார் 'பிறன் பெண்டிர் |
| ஈத்தவை கொள்வானாம், இஃது ஒத்தன்; சீத்தை, |
| செறு தக்கான் மன்ற பெரிது' |
| தலைவி புதல்வனொடு புலந்து உரைத்தல்
|
20 | சிறு பட்டி; ஏதிலார் கை, எம்மை எள்ளுபு நீ தொட்ட, |
| மோதிரம் யாவோ? யாம் காண்கு |
| அவற்றுள் நறா இதழ் கண்டன்ன செவ் விரற்கு ஏற்பச் |
| சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள் |
| குறி அறிந்தேன்; 'காமன் கொடி எழுதி, என்றும் |
25 | செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில் |
| பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல்' என்பது தன்னை |
| அறீஇய செய்த வினை |
| அன்னையோ? இஃது ஒன்று |
| முந்தைய கண்டும், எழுகல்லாத என் முன்னர், |
30 | வெந்த புண் வேல் எறிந்தற்றா, இஃது ஒன்று |
| தந்தை இறைத் தொடி மற்று இவன் தன் கைக்கண் |
| தந்தார் யார், எல்லாஅ! இது? |
| 'இஃது ஒன்று என் ஒத்துக் காண்க, பிறரும் இவற்கு' என்னும் |
| தன் நலம் பாடுவி, தந்தாளா நின்னை, |
35 | 'இது தொடுக' என்றவர் யார் |
| தலைவி தன் நெஞ்சு அழிந்து கூறுதல்
|
| அஞ்சாதி; நீயும் தவறிலை; நின் கை இது தந்த |
| பூ எழில் உண்கண் அவளும் தவறிலள்; |
| வேனிற் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்? |
| மேல் நின்றும் எள்ளி, இது இவன் கைத் தந்தாள் |
40 | தான் யாரோ? என்று வினவிய நோய்ப்பாலேன் |
| யானே தவறுடையேன்! |