|
87 | தலைவி கூற்று
| | | தலைவி | | ஒரூஉ நீ; எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை | | வெரூஉதும், காணுங்கடை | | தலைவன் | | தெரியிழாய்! செய் தவறு இல்வழி, யாங்குச் சினவுவாய், | | மெய் பிரிந்து, அன்னவர்மாட்டு? | | தலைவி | 5 | ஏடா! நினக்குத் தவறு உண்டோ? நீ வீடு பெற்றாய்; | | இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி; | | நிலைப் பால் அறியினும், நின் நொந்து நின்னைப் | | புலப்பார் உடையர், தவறு | | தலைவன் | | அணைத் தோளாய்! தீயாரைப் போல, திறன் இன்று உடற்றுதி; | 10 | காயும் தவறு இலேன் யான் | | தோழி | | மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது | | நாணிலன்ஆயின், நலிதந்து அவன்வயின் | | ஊடுதல் என்னோ, இனி? | | தலைவி நெஞ்சொடு கூறல் | | 'இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம்' என்னும் | 15 | தகையது காண்டைப்பாய், நெஞ்சே! பனி ஆனாப் | | பாடு இல் கண் பாயல் கொள |
| | பரத்தையர் சேரி் சென்றமை அறிந்திலள் எனத் தலைவிமாட்டுச் சென்றவனோடு அவள் ஊடி உறழ்ந்து கூறி, தோழி வாயிலாக ஊடல் தீர்வாள், தன் நெஞ்சொடு கூறியது |
|
|
|