89
தலைவி ஊடல் தீர்தல்


தலைவி

யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர்

ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து; எம் மனை

வாரல்; நீ வந்தாங்கே மாறு


தலைவன்

என் இவை, ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று

5

போர் எதிர்ந்தற்றாப் புலவல்? நீ கூறின், என்

ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது?


தலைவி

ஏஎ! தெளிந்தேம் யாம்; காயாதி எல்லாம் வல் எல்லா!

பெருங் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு,

வருந்தல் நின் வஞ்சம் உரைத்து


தலைவன்

10

மருந்து இன்று மன்னவன் சீறின், தவறு உண்டோ? நீ நயந்த,

இன்னகை! தீதோ இலேன்


தலைவி

மாண மறந்து உள்ளா நாணிலிக்கு இப் போர்

புறம் சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே! உறழ்ந்து இவனைப்

பொய்ப்ப விடேஎம் என நெருங்கின், தப்பினேன்

15

என்று அடி சேர்தலும் உண்டு!


தலைவன் 'காமத்தின் வலியும்' என்றதனால் ஆற்றாமை வாயிலாக வலிந்து புக்கு நெருங்கிக் கூடுமிடத்து, அவனுடன் தலைவி ஊடிச் சில சொல்லி, அவன் ஆற்றாமை கூறுவது கேட்டு ஊடல் தீர்ந்தது