| தலைவி |
| யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர் |
| ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து; எம் மனை |
| வாரல்; நீ வந்தாங்கே மாறு |
| தலைவன் |
| என் இவை, ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று |
5 | போர் எதிர்ந்தற்றாப் புலவல்? நீ கூறின், என் |
| ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது? |
| தலைவி |
| ஏஎ! தெளிந்தேம் யாம்; காயாதி எல்லாம் வல் எல்லா! |
| பெருங் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு, |
| வருந்தல் நின் வஞ்சம் உரைத்து |
| தலைவன் |
10 | மருந்து இன்று மன்னவன் சீறின், தவறு உண்டோ? நீ நயந்த, |
| இன்னகை! தீதோ இலேன் |
| தலைவி |
| மாண மறந்து உள்ளா நாணிலிக்கு இப் போர் |
| புறம் சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே! உறழ்ந்து இவனைப் |
| பொய்ப்ப விடேஎம் என நெருங்கின், தப்பினேன் |
15 | என்று அடி சேர்தலும் உண்டு! |