| ‘எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல், |
| உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும், |
| நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக் |
| குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்! |
5 | வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை, |
| என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும், |
| தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்; |
| அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!’ |
| ‘காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை; |
10 | ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய |
| மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர் |
| பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை, |
| மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்? |
| நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே |
15 | சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை, |
| நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்? |
| தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே |
| ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை, |
| யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்? |
20 | சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே |
| என ஆங்கு |
| இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்; |
| சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்; |
| அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே |