| தலைவி
|
| அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம், |
| புரி நெகிழ் முல்லை, நறவோடு, அமைந்த |
| தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார் |
| பொரு முரண் சீறச் சிதைந்து, நெருநையின் |
5 | இன்று நன்று, என்னை அணி |
| தலைவன்
|
| அணை மென் தோளாய்! செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்குஎவன், |
| ஐயத்தால்? என்னைக் கதியாதி; தீது இன்மை |
| தெய்வத்தான் கண்டீ தெளிக்கு |
| தலைவி
|
| மற்றது, அறிவல், யான் நின் சூள்; அனைத்தாக நல்லார் |
10 | செறி தொடி உற்ற வடுவும், குறி பொய்த்தார் |
| கூர் உகிர் சாடிய மார்பும், குழைந்த நின் |
| தாரும், ததர் பட்ட சாந்தமும், சேரி |
| அரி மதர் உண் கண்ணார் ஆராக் கவவின், |
| பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு, யானும் |
15 | செரு ஒழிந்தேன்; சென்றீ, இனி |
| தலைவன்
|
| தெரியிழாய்! தேற்றாய் சிவந்தனை காண்பாய், நீ தீது இன்மை |
| ஆற்றின் நிறுப்பல் பணிந்து |
| தலைவி
|
| அன்னதேல், ஆற்றல் காண்: |
| வேறுபட்டாங்கே கலுழ்தி; அகப்படின், |
20 | மாறுபட்டாங்கே மயங்குதி; யாது ஒன்றும் |
| கூறி உணர்த்தலும் வேண்டாது; மற்று நீ |
| மாணா செயினும், மறுத்து, ஆங்கே நின்வயின் |
| காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின், என் உற்றாய், |
| பேணாய் நீ பெட்பச் செயல்? |