| குறளன்
|
| என் நோற்றனைகொல்லோ |
| நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல் |
| ஈங்கு உருச் சுருங்கி |
| இயலுவாய்! நின்னோடு உசாவுவேன்; நின்றீத்தை |
| கூனி
|
5 | அன்னையோ! காண் தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான், |
| ஆண்தலைக்கு ஈன்ற பறழ் மகனே நீ! எம்மை, |
| 'வேண்டுவல்' என்று விலக்கினை; நின் போல்வார் |
| தீண்டப் பெறுபவோ மற்று? |
| குறளன்
|
| மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி, |
10 | நெறித்துவிட்டன்ன நிறை ஏரால் என்னைப் |
| பொறுக்கல்லா நோய் செய்தாய்; பொறீஇ நிறுக்கல்லேன்; |
| நீ நல்கின் உண்டு, என் உயிர் |
| கூனி
|
| குறிப்புக் காண் வல்லுப் பலகை எடுத்து நிறுத்தன்ன |
| கல்லாக் குறள! கடும் பகல் வந்து எம்மை, |
15 | 'இல்லத்து வா' என, மெய் கொளீஇ, எல்லா! நின் |
| பெண்டிர் உளர்மன்னோ? கூறு |
| குறளன்
|
| நல்லாய்! கேள்: உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய |
| கொக்கு உரித்தன்ன கொடு மடாய்! நின்னை யான் |
| புக்கு அகலம் புல்லின், நெஞ்சு ஊன்றும்; புறம் புல்லின், |
20 | அக்குளுத்து; புல்லலும் ஆற்றேன்; அருளீமோ, |
| பக்கத்துப் புல்லச் சிறிது |
| கூனி குறளனை இகழ்ந்து செல்லுதலும், அவள் செலவு நோக்கிக் குறளன் தன் நெஞ்சிற்கு உரைத்தலும்
|
| 'போ, சீத்தை! மக்கள் முரியே! நீ மாறு, இனி; தொக்க |
| மரக் கோட்டம் சேர்ந்து எழுந்த பூங் கொடி போல, |
| நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர், எம்மைப் |
25 | புரப்பேம் என்பாரும் பலரால்; பரத்தை என் |
| பக்கத்துப் புல்லீயாய் என்னுமால்; தொக்க |
| உழுந்தினும் துவ்வா, குறு வட்டா! நின்னின் |
| இழிந்ததோ, கூனின் பிறப்பு?' 'கழிந்து ஆங்கே, |
| "யாம் வீழ்தும்" என்று தன் பின் செலவும், உற்றீயாக் |
30 | கூனி குழையும் குழைவு காண்' |
| 'காமனார் நடக்கும் நடைகாண்' என்ற கூனியின்முன், குறளன் நடந்து காட்டுதல்
|
| 'யாமை எடுத்து நிறுத்தற்றால், தோள் இரண்டும் வீசி, |
| யாம் வேண்டேம் என்று விலக்கவும், எம் வீழும் |
| காமர் நடக்கும் நடை காண்' 'கவர் கணைச் |
| சாமனார் தம்முன் செலவு காண்' |
| குறளனின் சூளுரை
|
35 | ஓஒ! காண், நம்முள் நகுதல் தொடீஇயர், நம்முள் நாம் |
| உசாவுவம்; கோன் அடி தொட்டேன் |
| கூனி குறளனை விரும்பி மொழிதல்
|
| ஆங்கு ஆக! சாயல் இன் மார்ப! அடங்கினேன்; 'ஏஎ! |
| பேயும் பேயும் துள்ளல் உறும்' எனக் |
| கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல்; |
40 | தண்டாத் தகடு உருவ! வேறாகக் காவின் கீழ்ப் |
| போதர்; அகடு ஆரப் புல்லி முயங்குவேம் |
| துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை |
| முகடு காப்பு யாத்துவிட்டாங்கு |