| தலைவி
|
| நில், ஆங்கு; நில், ஆங்கு; இவர்தரல் எல்லா! நீ |
| நாறு இருங் கூந்தலார் இல் செல்வாய், இவ் வழி, |
| ஆறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே |
| மாறு, இனி, நின் ஆங்கே, நின் சேவடி சிவப்ப |
| தலைவன்
|
5 | செறிந்து ஒளிர் வெண் பல்லாய்! யாம் வேறு இயைந்த |
| குறும்பூழ்ப் போர் கண்டேம்; அனைத்தல்லது, யாதும் |
| அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது |
| தலைவி
|
| குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன், நீ என்றும்; |
| புதுவன ஈகை வளம் பாடி, காலின் |
10 | பிரியாக் கவி கைப் புலையன் தன் யாழின் |
| இகுத்த செவி சாய்த்து, இனி இனிப் பட்டன |
| ஈகைப் போர் கண்டாயும் போறி; மெய் எண்ணின், |
| தபுத்த புலர்வில் புண் |
| ஊரவர் கவ்வை உளைந்தீயாய், அல்கல் நின் |
15 | தாரின்வாய்க் கொண்டு முயங்கி, பிடி மாண்டு, |
| போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டு, ஆடும் |
| பார்வைப் போர் கண்டாயும் போறி; நின் தோள் மேலாம் |
| ஈரமாய்விட்டன புண் |
| கொடிற்றுப் புண் செய்யாது, மெய்ம் முழுதும் கையின் |
20 | துடைத்து, நீ வேண்டினும் வெல்லாது கொண்டு, ஆடும் |
| ஒட்டிய போர் கண்டாயும் போறி; முகம்தானே |
| கொட்டிக் கொடுக்கும் குறிப்பு |
| தலைவன்
|
| ஆயின், ஆயிழாய்! அன்னவை யான் ஆங்கு அறியாமை |
| போற்றிய, நின் மெய் தொடுகு |
| தலைவியின் இகழ்ச்சியும் தலைமகன் மாற்றமும்
|
25 | 'அன்னையோ!' 'மெய்யைப் பொய் என்று மயங்கிய, கை ஒன்று |
| அறிகல்லாய் போறிகாண், நீ |
| நல்லாய்! பொய் எல்லாம் ஏற்றி, தவறு தலைப்பெய்து, |
| கையொடு கண்டாய்; பிழைத்தேன்; அருள், இனி' |
| 'அருள்' என்ற தலைவனுக்குத் தலைவி
|
| அருளுகம் யாம்; யாரேம், எல்லா! தெருள? |
30 | அளித்து, நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும் |
| விளித்து, நின் பாணனோடு ஆடி அளித்தி |
| விடலை நீ நீத்தலின், நோய் பெரிது ஏய்க்கும்; |
| நடலைப்பட்டு, எல்லாம் நின் பூழ் |