| தலைவி, 'யாங்குச் சென்று வந்தாய்' என, தலைவன் உரைத்த பதில்
|
| 'ஏந்து எழில் மார்ப! எதிர் அல்ல, நின் வாய்ச் சொல்; |
| பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்து ஆனா மைந்தினை; |
| சாந்து அழி வேரை; சுவல் தாழ்ந்த கண்ணியை; |
| யாங்குச் சென்று, ஈங்கு வந்தீத்தந்தாய்?' 'கேள் இனி: |
5 | ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்! |
| குதிரை வழங்கி வருவல்' |
| தலைவி
|
| அறிந்தேன், குதிரைதான்; |
| பால் பிரியா ஐங்கூந்தற் பல் மயிர்க் கொய் சுவல், |
| மேல் விரித்து யாத்த சிகழிகைச் செவ் உளை, |
10 | நீல மணிக் கடிகை வல்லிகை, யாப்பின் கீழ் |
| ஞால் இயல் மென் காதின் புல்லிகைச் சாமரை, |
| மத்திகைக் கண்ணுறையாகக் கவின் பெற்ற |
| உத்தி ஒரு காழ், நூல் உத்தரியத் திண் பிடி, |
| நேர் மணி நேர் முக்காழ்ப் பல்பல கண்டிகை, |
15 | தார் மணி பூண்ட தமனிய மேகலை, |
| நூபுரப் புட்டில், அடியொடு அமைத்து யாத்த |
| வார் பொலம் கிண்கிணி, ஆர்ப்ப இயற்றி, நீ |
| காதலித்து ஊர்ந்த நின் காமக் குதிரையை, |
| ஆய் சுதை மாடத்து அணி நிலா முற்றத்துள், |
20 | ஆதிக் கொளீஇ, அசையினை ஆகுவை, |
| வாதுவன்; வாழிய, நீ! |
| சேகா! கதிர் விரி வைகலில், கை வாரூஉக் கொண்ட |
| மதுரைப் பெரு முற்றம் போல, நின் மெய்க்கண் |
| குதிரையோ, வீறியது? |
25 | கூர் உகிர் மாண்ட குளம்பினது; நன்றே |
| கோரமே வாழி! குதிரை |
| வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்திக் |
| குதிரை உடல் அணி போல, நின் மெய்க்கண் |
| குதிரையோ, கவ்வியது? |
30 | சீத்தை! பயம் இன்றி ஈங்குக் கடித்தது; நன்றே |
| வியமமே வாழி! குதிரை |
| மிக நன்று, இனி அறிந்தேன், இன்று நீ ஊர்ந்த குதிரை; |
| பெரு மணம் பண்ணி, அறத்தினில் கொண்ட |
| பருமக் குதிரையோ அன்று; பெரும! நின் |
35 | ஏதில் பெரும் பாணன் தூது ஆட, ஆங்கே ஓர் |
| வாதத்தான் வந்த வளிக் குதிரை; ஆதி |
| உரு அழிக்கும், அக் குதிரை; ஊரல், நீ; ஊரின், பரத்தை |
| பரியாக, வாதுவனாய், என்றும் மற்று அச் சார்த் |
| திரி; குதிரை ஏறிய செல் |