| தலைவி
|
| அன்னை: கடுஞ் சொல் அறியாதாய் போல, நீ |
| என்னைப் புலப்பது ஒறுக்குவென்மன் யான் |
| சிறுகாலை இற் கடை வந்து, குறி செய்த |
| அவ் வழி என்றும் யான் காணேன் திரிதர, |
5 | 'எவ் வழிப் பட்டாய்?' சமனாக இவ் எள்ளல் |
| தலைவன்
|
| முத்து ஏர் முறுவலாய்! நம் வலைப் பட்டது ஓர் |
| புத்தியானை வந்தது; காண்பான் யான் தங்கினேன் |
| 'புதிய யானை காணத் தங்கினேன்' என்ற தலைவனுக்குத் தலைவி
|
| ஒக்கும் |
| அவ் யானை வனப்பு உடைத்தாகலும் கேட்டேன்: |
10 | அவ் யானை தான் சுண்ண நீறு ஆடி, நறு நறா நீர் உண்டு |
| ஒள் நுதல் யாத்த திலக அவிர் ஓடை, |
| தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டு, |
| தொய்யகத் தோட்டி, குழை தாழ் வடி மணி, |
| உத்தி பொறித்த புனை பூண் பருமத்து |
15 | முத்து ஏய்க்கும் வெண் பல் நகை திறந்து, |
| நல் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து, |
| தன் நலம் காட்டி, தகையினால், கால் தட்டி வீழ்க்கும், |
| தொடர் தொடராக வலந்து; படர் செய்யும் |
| மென் தோள் தடக் கையின் வாங்கி, தற் கண்டார் |
20 | நலம் கவளம் கொள்ளும்; நகை முக வேழத்தை |
| இன்று கண்டாய் போல் எவன் எம்மைப் பொய்ப்பது, நீ? |
| எல்லா! கெழீஇ, தொடி செறித்த தோள் இணை, தத்தித் |
| தழீஇக் கொண்டு, ஊர்ந்தாயும் நீ |
| குழீஇ அவாவினால், தேம்புவார் இற் கடை ஆறா, |
25 | உவா அணி ஊர்ந்தாயும் நீ |
| மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண் |
| நீர்க்கு விட்டு, ஊர்ந்தாயும் நீ |
| சார்ச்சார் நெறி தாழ் இருங் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் |
| சிறு பாகராகச் சிரற்றாது, மெல்ல, |
30 | விடாஅது நீ எம் இல் வந்தாய்; அவ் யானை |
| கடாஅம் படும்; இடத்து ஓம்பு |