| நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும், அவை எடுத்து, |
| அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும் |
| திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது, |
| குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல், உலகத்து |
5 | மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் |
| பிழையாது வருதல் நின் செம்மையின் தர, வாய்ந்த |
| இழை அணி கொடித் திண் தேர், இன மணி யானையாய்! |
| அறன் நிழல் எனக் கொண்டாய், ஆய் குடை; அக் குடைப் |
| புற நிழற்கீழ்ப் பட்டாளோ, இவள்? இவண் காண்டிகா |
10 | பிறை நுதல் பசப்பு ஊரப் பெரு விதுப்பு உற்றாளை! |
| பொய்யாமை நுவலும், நின் செங்கோல்; அச் செங்கோலின் |
| செய் தொழில் கீழ்ப் பட்டாளோ, இவள்? இவண் காண்டிகா |
| காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை! |
| ஏமம் என்று இரங்கும், நின் எறி முரசம்; அம் முரசின் |
15 | ஏமத்து இகந்தாளோ, இவள்? இவண் காண்டிகா |
| வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை! |
| ஆங்கு |
| நெடிது சேண் இகந்தவை காணினும், தான் உற்ற |
| வடுக் காட்ட, கண் காணாதற்றாக, என் தோழி |
20 | தொடி கொட்ப நீத்த கொடுமையைக் |
| கடிது என உணராமை கடிந்ததோ, நினக்கே? |