புலால் பிறிது ஒன்றன் புண் - புலால் என்பது வேறோர் உடம்பின் புண்ணே; அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும் - அவ்வுண்மையை அறியப் பெறின் அதை உண்ணாதிருத்தல் வேண்டும். உண்மையை உணர்தலாவது நோய்ப்பட்டதென்றும் துப்புர வற்றதென்றும் அருவருப்பானதென்றும் அறிதல். அங்ஙனம் அறியின் உண்ணாரென்பது கருத்து. 'புலாஅல்' இசை நிறையளபெடை. அது வுணர்வார் என்பதின் வகர வுடம்படுமெய் தொக்கது.
|