பொருட்பால் அரசியல் அதிகாரம் 56. கொடுங் கோன்மை அஃதாவது , அரசனாற் கையாளப்படும் நேர்மை யில்லா ஆட்சி முறைமை, நேர்மையில்லா ஆட்சி வளைந்த கோல் போலிருத்தலால் கொடுங்கோல் எனப்பட்டது . கொடுங்கோலின் தன்மை கொடுங்கோன்மை . இது செங்கோன்மைக்கு மாறாகலின் , அது கூடாதென்பதற்கு அதன்பின் வைக்கப்பட்டது. |