பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1728 

   (வி - ம்.) துளும்ப : தவத்தின் சுமையால் இளகலுமாம் என்பர் நச்சினார்க்கினியர்.

( 465 )
3064 நணிதினெண் வினையின் னவைகண் ணிறீஇத்
துணிய வீர்ந்திடுந் துப்பமை சிந்தையான்
மணியின் மேன்மணி கட்டிய தொத்ததற்
கணியு மாயலர் ஞாயிறு மாயினான்.

   (இ - ள்.) நணிதின் எண்வினை இன்னவை கண் நிறீஇ - அண்மையாக எண்வினையினுடைய குற்றங்களை முன்னர் நிறுத்தி; துணிய ஈர்ந்திடும் துப்பு அமை சிந்தையான் - அவற்றை அற்றுப்போம்படி, அறுத்திடும் தூய்மை பொருந்திய சிந்தையினனாய் (அதன்மேல் நின்றபோது); மணியின்மேல் மணி கட்டியது ஒத்து - நீலமணியின்மேல் மாணிக்கத்தை அழுத்தியது ஒத்து; அதற்கு அணியுமாய் அலர் ஞாயிறும் ஆயினான் - அதற்கு ஓர் அணியுமாய் இளஞாயிறும் ஆனான்.

   (வி - ம்.) நணிதின் - அண்ணிதாக, எண்வினை - காதி அகாதி கர்மங்கள.் துப்பு - வலிமையுமாம். மணி - நீலமணி. இது மலைக்குவமை. மேன்மணி என்புழி மணி - மாணிக்கம், இது சீவகனுக்குவமை.

( 466 )
3065 குன்றின்வீ ழருவிக் குரல் கோடணைச்
சென்றெலாத் திசையுஞ் சிலம்பின் மிசை
நின்றனன் னிறை வம்மின் நீரென
வொன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம்.

   (இ - ள்.) குன்றின்வீழ் அருவிக் குரல் - அக்குன்றினின்றும் வீழும் அருவியின் குரல்; கோடு அணைச்சென்று - மரக்கோடுகளை அணைந்து சென்று; எலாத் திசையும் - எல்லாத்திசைகளினும்; சிலம்பின்மிசை இறை நின்றனன் - இக் குன்றின்மேற் சீவகன் நிற்கின்றனன், நீர் வம்மின் என - நீவிரும் வாருங்கோள் என்று; ஒரு பால் எலாம் ஒன்றி நின்று அதிரும் - ஒரு பக்கம் எல்லாம் பொருந்தி நின்று ஒலிக்கும்.

   (வி - ம்.) கோடு : குன்றின் உச்சியுமாம்.

   இது தற்குறிப்பேற்றவணி. எலாத் திசையும் - எல்லாத் திசையும். இச் சிலம்பின் மிசை என்க. இறை நின்றனன் என்க. இறை : சீவகன், குரல் அதிரும் என்க. கோடு - மலைச் சிகரமுமாம்.

( 467 )
3066 செம்பொன் பின்னிய போற்றினைக் காவலர்
வெம்பு மும்மத வேழம் விலக்குவார்
தம்புனத் தெறிமாமணி சந்து பாய்ந்
தும்பர் மீனெனத் தோன்றுமொர் பாலெலா