முத்தி இலம்பகம் |
1731 |
|
|
யாகிய திங்கள் நான்கும் என்க. இஃது இளவேனிலும் முதுவேனிலும் ஆகிய கோடைக்காலத்துச் சீவகன் றவநிலை கூறிற்று.
|
( 472 ) |
3071 |
பார்க்கடல் பருகி மேகம் | |
|
பாம்பினம் பதைப்ப மின்னி | |
|
வார்ப்பிணி முரசி னார்த்து | |
|
மண்பக விடித்து வான | |
|
நீர்த்திரள் பளிக்குத் தூணி | |
|
சொரிந்திட நின்று வென்றான். | |
|
மூர்த்தியாய் முனிவ ரேத்து | |
|
முனிக்களி றனைய கோமான். | |
|
(இ - ள்.) மூர்த்தியாய் முனிவர் ஏத்தும் முனிக்களிறு அனைய கோமான் - தவவுருவினனாகி, முனிவர்கள் வாழ்த்தும் முனிக்களிறு போன்ற அரசன்; வானம் மேகம் பார்க்கடல் பருகி - வானிலே முகில் பாறையையுடைய கடலிலே நீரைப் பருகி; பாம்பு இனம் பதைப்ப மின்னி - பாம்பின் திரள் துடிக்க மின்னி; வார்ப்பிணி முரசின் ஆர்த்து - ஆர்ரால் இறுகிய முரசென முறுகி; மண்பக இடித்து - நிலம் பிளக்க இடித்து; நீர்த் திரள் பளிக்குத் தூணி சொரிந்திட நின்று வென்றான் - நீர்த்திரளைப் பளிங்குக் கோல் கிடக்குந் தூணி அதனைப் பெய்வது போலப் பெய்ய (ஆவணி முதலிய திங்கள் நான்கும்) நின்று வென்றான்.
|
(வி - ம்.) இஃது ஆவணி புரட்டாதி ஐப்பசி கார்த்திகை யாகிய காரும் கூதிருமாகிய பருவத்துத் தவநிலை கூறுகின்றது. பார் - பறை, பாப்பினம் - பாம்பின் திரள். ”விரிநிற நாகம் விடருளதேனும் உருமின் கடுஞ்சினம் சேணின்று முட்கும்” ஆதலான் பாப்பினம் பதைப்ப என்றார். மேகம் நீர்த்திரளைப் பளிக்குத்தூணி பளிக்குக்கோலைச் சொரிவதுபோலச் சொரிய என்க. பக - பிளக்க. மூர்த்தி - தவவேடம்.
|
( 473 ) |
3072 |
திங்கணான் கவையு நீங்கத் | |
|
திசைச்செல்வார் மடிந்து தேங்கொள் | |
|
பங்கயப் பகைவந் தென்னப் | |
|
பனிவரை யுருவி வீசு | |
|
மங்குல்சூழ் வாடைக் கொல்கான் | |
|
வெள்ளிடை வதிந்து மாதோ | |
|
விங்குநான் காய திங்க | |
|
ளின்னுயி ரோம்பி னானே. | |
|
(இ - ள்.) நான்கு திங்கள் அவையும் நீங்க - நான்கு திங்களாகிய காரும் கூதிரும் கழிந்த பிறகு; திசைச் செல்வார்.
|