பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1732 

மடிந்து - திசைதொறும் செல்கின்றவர் செல்லாமற் சோம்பியிருக்க; தேம் கொள் பங்கயப் பகை வந்தென்ன - அவ்விடங்களிலே கொண்ட பனி வந்ததாக, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடைக்கு ஒல்கான - பனி மலையைத் தடவி வரும் இருள் சூழும் வாடைக்குத் தளராதவனாய்; வெள்ளிடை வதிந்து - வெளியிடத்திலே தயங்கியிருந்து; இங்கு நான்கு ஆய திங்கள் இன உயிர் ஓம்பினான் - தங்கிய அந்நான்கு திங்களாகிய பனிக்காலத்திலே இனிய உயிரைக் காப்பாற்றினான்.

   (வி - ம்.) முன்பனி, பின்பனி இரண்டுங் கூடிய பனிக்காலத் தவநிலை கூறினார். பங்கயப்பகை - பனி, இங்குதல் -தங்குதல்.

( 474 )
3073 வடிமலர் நெடுங்க ணாரு
  மைந்தரும் வரவு பார்த்தங்
கடிமலர் பரவ வேறி
  யாரமிர் தரிதிற் கொள்வான்
கடிமலர்க் கமலத் தன்ன
  கையினை மறித்துக் கொள்ளான்
முடிதவக் கடலை நீந்தி
  யின்னண முற்றி னானே.

   (இ - ள்.) அங்கு வடிமலர் நெடுங்கணாரும் மைந்தரும் வரவு பார்த்து - அப்போது கூரிய மலரனைய நெடுங்கண் மங்கையரும் நந்தட்டன் முதலிய மைந்தர்களும் சரியைக்கு வரும் இவன் வரவைப் பார்த்து; ஏறி அடிமலர் பரவ - அவ் வரையில் ஏறி இவன் அடிமலரை வாழ்த் ; அரிதின் ஆர் அமிர்து கொள்வான் - அரிதாகச் சிறந்த உணவைக் கொள்கிறவன் (சிறிது கொண்டு); கடிமலர்க் கமலத்து அன்ன கையினை மறித்துக் கொள்ளான் - மணமலராகிய தாமரை போன்ற கையாலே விலக்கிக் கொள்ளாதவனாய்; முடி தவக்கடலை நீந்தி இன்னணம் முற்றினான் - வீடுபெறுதற்குரிய தவக் கடலைக் கடந்து இவ்வாறு அத்தவத்தை முடித்தான்.

   (வி - ம்.) முடித்தல் - வீடுபெறுதல்.

   நெடுங்கணார் என்றது காந்தருவதத்தை முதலிய மனைவிமாரை. மைந்தர் நந்தட்டன் முதலியோர். ஆரமிர்து - உணவு, கடிக்கமல மலரன்ன கை என்க. முடிதவம் : வினைத்தொகை.

( 475 )
3074 ஒளிறுதோ் ஞானம் பாய்மா
  வின்னுயி ரோம்ப லோடைக்
களிறுநற் சிந்தை காலாள்
  கருணையாங் கவசஞ் சீலம்