பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 173

 வீங்கு இருங் காதல் காட்டி,
     விரி அரி சுமந்த பீடத்து
ஓங்கிய மகுடம் சூடி,
     உவகை வீற்றிருப்பக் காணான்.

     ஆங்கு வந்து அடைந்த அண்ணல் - தயரதனின் அரண்மனைக்கு
வந்து சேர்ந்தஇராமபிரான்;  ஆசையின் கவரி வீச - திசைகள் தோறும்
சாமரைகள் வீச;  பூங் குழல்மகளிர் உள்ளம் - பூவை அணிந்துள்ள
குழலையுடைய மங்கையர் மனம்;  புதுக் களி ஆட - புதிய மகிழ்ச்சியால்
ஆடவும்;  வீங்கு  இருங் காதல் காட்டி -  மிகுந்த விருப்பத்தை
(தன்வருகையில்) காட்டி;  ஓங்கிய மகுடம் சூடி - சிறந்த கிரீடத்தை
அணிந்த;  அரசன் - தயரதன்; விரி அரி சுமந்த பீடத்து - விசாலமான
சிங்கம் தாங்கும்ஆசனத்தில்;  உவகை வீற்றிருப்பக் காணான் -
மகிழ்வுடன் வீற்றிருக்கவும்கண்டானில்லை.

     மகளிர் உவகையால் ஆடுதலையும் தயரதன் காதல் காட்டி
வீற்றிருத்தலையும் இராமன்காணவில்லை அரண்மனை பொலிவின்றி
இருந்தது.  என்றவாறு.  ஆசை - திசை.  வீற்றிருத்தல் -மற்றொருவர்க்கு
இல்லாத சிறப்போடு விளங்கித் தோன்றுதல்.                       104

1595.வேத்தவை, முனிவரோடு,
     விருப்பொடு களிக்கும் மெய்ம்மை
ஏத்து அவை இசைக்கும், செம் பொன்
     மண்டபம் இனிதின் எய்தான்,
ஒத்து அவை, உலகத்து எங்கும்
     உள்ளவை, உணர்ந்தார் உள்ளம்
பூத்தவை, வடிவை ஒப்பான், -
     சிற்றவை கோயில் புக்கான்.

     ஒத்து அவை - மறைகளையும்;  உலகத்து எங்கும் உள்ளவை -
உலகு எங்கும்இருக்கும் அறிவு நூல்களையும்;  உணர்ந்தார் உள்ளம்
பூத்தவை -
நன்கு உணர்ந்தஞானிகளின் நெஞ்சத்தில் தோன்றுவனவாகிய;
இராமபிரான்; வேத்தவை - அரசர் கூட்டம்;முனிவரோடு -
முனிவர்களுடனே கூடி;  விருப்பொடு களிக்கும் - அன்புடன்மகிழ்கின்ற;
மெய்ம்மை ஏத்து அவை இசைக்கும் - உண்மையான கீர்த்திகளைப்
பாடுகின்ற;  செம் பொன் மண்டபம் - சிறந்த பொன்னால் ஆகிய
மண்டபத்தினுள்ளே;  இனிதின் எய்தான் - இனிமையாகப் புகாதவனாகி;
சிற்றவை கோயில் புக்கான் -சிறிய தாயாகிய கைகேயியினுடைய
மாளிகையில் புகுந்தான்.

     அரசரும் முனிவரும் தன் கீர்த்தியைப் பாடிக்கொண்டிருக்கும்
விழாமண்டபத்தில் நுழையாமல்இராமன் கைகேயியின் மாளிகையில்
புகுந்தான். உலகத்து