தாகும்; நீ காட்டே உறைவாய் - நீ வனத்தில் வசிப்பாய்; இக் கைகேசியையும் கண்டு- இந்தக் கைகேயியையும் பார்த்துக்கொண்டு; இந்நாட்டே உறைவேன் என்றால்-இந்த நாட்டிலேயே (நான்) வசிப்பேன் ஆனால்; என் நன்மை நன்று - எனதியல்புநன்றாயிருந்தது;' என்றான்- ‘இன்றே' ‘ஏ'காரம் தேற்றம். கேட்டே ஏகாரம் சிறப்பு. காட்டே, நாட்டே ஏகாரங்கள்அசை. நன்று இகழ்ச்சிக் குறிப்பு. 63 | 1669. | ‘மெய் ஆர் தவமே செய்து, உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற செய்யாள் என்னும் பொன்னும், நிலமாது என்னும் திருவும், உய்யார்! உய்யார்! கெடுவேன்; உன்னைப் பிரியின், வினையேன், ஐயா! கைகேசியை நேராகேனோ நான்? என்றான். | ஐயா! - ஐயனே; மெய் ஆர் தவமே செய்து- உண்மை பொருந்திய தவத்தைச்செய்து; உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற - உன்னுடைய வலிய மார்பைக் கிடைத்தற்கருமையாகப் பெற்ற; செய்யாள் என்னும் பொன்னும்- திருமகள் என்னும் பெண்ணும்; நிலமாது என்னும் திருவும்- நிலமகள் என்னும் செல்வியும்; உய்யார் உய்யார் - நீவனம் செல்லப் பிழைக்கமாட்டார்; கெடுவேன் - பாவியாகியவனும்; வினையேன் நான் - தீவினை உடையவனுமாகிய நான்; உன்னைப் பிரியின் - உன்னைப் பிரிந்து (உயிர்வாழ்ந்தால்); கைகேசியை நேராகேனோ' - கைகேயிக்கு ஒப்பாகிவிட மாட்டேனா;' என்றான்- உன்னைப் பிரிந்து உயிர்தரித்தால் கைகேயிக்கும் எனக்கும் என்ன வேறுபாடு? நானும் அவள்போல வன்கண்மை உடையவனாய்விடுவேன் அல்லவா - என்றான். 64 | 1670. | பூண் ஆர் அணியும், முடியும், பொன் ஆசனமும், குடையும், சேண் ஆர் மார்பும், திருவும், தெரியக் காணக் கடவேன், மாணா மர வற்கலையும், மானின் தோலும் அவை நான் காணாது ஒழிந்தேன் என்றால், நன்று ஆய்த்து அன்றோ கருமம்?' |
|